Thursday, June 22, 2023

இலங்கை அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் பணம் பெற்றுக்கொள்பவர்களின் பெயர் பட்டியல் - "அஸ்வெசும"

 


இலங்கை அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட "அஸ்வெசும" திட்டத்தின் மூலம் பணக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை உங்கள் கிராம சேவகர் பிரிவினை தெரிவு செய்து கொள்வதன் மூலம் உங்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

பெயர் பட்டியலினை பெற்றுக் கொள்ள கீழ் உள்ள link யினை கிளிக் செய்யவும்.

https://iwms.wbb.gov.lk/household/list


உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் மேல்முறையீடு செய்து அல்லது ஜூலை மாதத்திற்குப் பின் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமாக இருக்கும். 

இது தொடர்பில் உங்கள் கிராம சேவகரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும்'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ், 40% குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 4 பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபாவை அரசாங்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்

 ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பற்றி இன்று வரைக்கும் எம்மில் அதிகமானவர்களுக்கு போதிய தெளிவில்லாமல் இருக்கின்றது.  ஆகவே தான், இதன்மூலம் EPF பற்...