Wednesday, April 3, 2024

உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்



 ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பற்றி இன்று வரைக்கும் எம்மில் அதிகமானவர்களுக்கு போதிய தெளிவில்லாமல் இருக்கின்றது. 

ஆகவே தான், இதன்மூலம் EPF பற்றிய அடிப்படை தெளிவொன்றினை வழங்க முடியும் என எதிர்பார்க்கின்றேன். ஏனெனில், தனியார் துறையில் வேலை செய்யும் பலரும் அவர்களின் தற்போதைய நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும், மற்றும் வயது முதிர்ந்த காலத்தை எண்ணி வருந்துவதிலிருந்து மீண்டு நம்பிக்கை ஊட்டும் எதிர்காலம் இந்த EPF மூலம் கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டிற்கு வர முடியும்.

தனியார் துறையில் பணிபுரிபவர்களின் வாழ்வில் எவ்வித இடர்பாடுகளும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசினால் 1958 ஆம் ஆண்டு 15ம் இலக்க சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தினால் அங்கிகாரம் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகிறது.

ஒரு ஊழியரின் மாதாந்த சம்பளத்தில் ஆகக் குறைந்தது 8% வீதமான தொகையினை ஊழியரிடமிருந்தும் அச்சம்பளத்தின் 12% வீதமான தொகையினை ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படாமல் தொழில் தருணரிடமிருந்து பெறப்பட்டு மாதாந்தம் இலங்கை மத்திய வங்கியில் வைப்பிலிடப்படுவது இந்த EPF பணமாகும்.

நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது EPF பணத்தின் மூலம் நிகழ்காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள்

 1. வீட்டு நோக்கங்களுக்காக அல்லது மருத்துவ சிகிச்சைக்காக EPF வைப்பிலிருந்து 30% முன் பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். அதாவது உங்கள் EPF பணத்தில் முழுத் தொகையின் 30% வீதமான பணத்தினை நீங்கள் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள முடியும்.

2. ஊழியர் சேவமலாக நிதியிலிருந்து வீடமைப்புக்காக கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தல். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உங்கள் EPF பணத்தை கொண்டு வீடு அமைப்புக்காக கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.


EPF நிதியிலிருந்து நீங்களும் உங்கள் குடும்பமும் எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய நன்மைகள் அதாவது உங்கள் EPF நிதிகனை நீங்கள் முழுமையாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்

1. வயது பூரணமடைவதால் வேலை விட்டு விலகுதல். அதாவது ஆண் ஒருவராயின் 55 வயதும், பெண் ஒருவராயின் 50 வயதும் பூரணமாக இருந்தால், அவர் வேலையை விட்டு விலகி அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். 

2. திருமண நோக்கத்திற்காக வேலையை விட்டு விலகுதல். இது பெண்களுக்கு பாத்திரமான தாகும். அதாவது, வேலையில் இருந்து விலகி மூன்று மாதங்களுக்குள் திருமண செய்தல். அல்லது திருமணம் செய்து 5 வருடங்களுக்குள் வேலையில் இருந்து நீங்கிச் சென்றுள்ளவிடத்து அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

3. மருத்துவ காரணத்தால் உடல் கோளாறு காரணமாக நிரந்தரமாக வேலையை விட்டு விலகுமிடத்து, அவரது EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு அரசாங்க வைத்திய உத்தியோகத்தரொருவரால் உடலியலாமை நிலைபற்றி சுகாதாரம் 307 ஆம் இலக்க பத்திரம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

4. நிரந்தர குடியுரிமை பெற்று இலங்கையை விட்டு வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக வேவலயினை விட்டு விலகுதல். அதாவது இலங்கை பிரஜா உரிமையினை ரத்து செய்து வெளிநாடு ஒன்றில் பிரஜா உரிமை பெற்று செல்லும்போது உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

5. அரசாங்க சேவையில் நிரந்தர மற்றும் ஓய்வூதியத்துடன் கூடிய தொழில் ஒன்றிற்காக செல்லும்போது வேலையில் இருந்து விட்டு விலகுதல்.

6. கூட்டுத்தாபனம் ஒன்றும் மூடப்படும் போது அல்லது மேலதிக தொழிலாளர்களை நீக்கும் போது வேலையில் இருந்து விலகுதல்

இவ்வாறான 06 சந்தர்ப்பங்களிலும் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

இது தவிர ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர் இறந்த பின்னர் அவர் சார்ந்த பின்னுரித்தாளிகள் அவரின் EPF பணத்தினை பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக்கொள்ள உங்கள் நிரந்தர வதிவிடத்திற்கு அண்மையில் உள்ள தொழில் திணைக்களத்தில் விண்ணப்பங்களை கையளிப்பதன் மூலம் உங்கள் EPF பணத்தினை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், உங்கள் EPF பணத்தினை பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவம் மற்றும் ஏனைய விண்ணப்பப் படிவங்களை தொழில் திணைக்களத்தின் இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

தொழில் திணைக்கள விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள click பண்ணவும்

இது தவிர மேலதிக தகவல்களை உங்கள் வதிவிடத்திற்கு அண்மையில் உள்ள தொழில் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.


YouTube video

https://youtu.be/v3E0JK7vL1g?si=rxKwsFHVkECFkTbl








Sunday, February 11, 2024

அரச உத்தியோகத்தர்களின் ஆவண கோப்புக்கள் இன் குறைபாடுகள்

 



இணைந்த சேவைகளின் கீழ் உள்ள ஒவ்வொரு சேவையினை click செய்து பதிவிறக்கம் செய்வதன் மூலம், உங்கள் நிறுவனத்தைச் சேரந்த உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கைகள் தொடர்பான ஆவண கோப்புகளில் குறைபாடாக உள்ள ஆவணங்கள் பற்றிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்

1. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை


2. (I)அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை

    (II)அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை


3. இணைந்த சாரதிகள் சேவை


4. அலுவலக ஊழியர் சேவை


5. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை


Thursday, June 22, 2023

இலங்கை அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் பணம் பெற்றுக்கொள்பவர்களின் பெயர் பட்டியல் - "அஸ்வெசும"

 


இலங்கை அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட "அஸ்வெசும" திட்டத்தின் மூலம் பணக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை உங்கள் கிராம சேவகர் பிரிவினை தெரிவு செய்து கொள்வதன் மூலம் உங்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

பெயர் பட்டியலினை பெற்றுக் கொள்ள கீழ் உள்ள link யினை கிளிக் செய்யவும்.

https://iwms.wbb.gov.lk/household/list


உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் மேல்முறையீடு செய்து அல்லது ஜூலை மாதத்திற்குப் பின் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமாக இருக்கும். 

இது தொடர்பில் உங்கள் கிராம சேவகரிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும்'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ், 40% குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 4 பிரிவுகளில் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபாவை அரசாங்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Friday, May 5, 2023

வருடாந்த இடமாற்றம்.

 

இலங்கை அரச சேவையில் இடம்பெறும் வருடாந்த இடமாற்றம் சம்பந்தமான கடிதத்துடனான பெயர் பட்டியல் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக அவர்களின் ஒப்பமிடப்பட்டு 2023.05.04 ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கை நிர்வாக சேவை தரம் I , II, III க்கான இடமாற்ற பட்டியல், இலங்கை கணக்காளர் சேவை தரம் I,II,III க்கான இடமாற்றம் மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை தரம் I,II,III க்கான இடமாற்றம் என்பன தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கீழ் உள்ள link யினூடாக இடமாற்றம் பற்றிய கடிதம் மற்றும் பெயர் பட்டியலினை பெற்றுக் கொள்ள முடியும்்

இலங்கை நிர்வாக சேவை தரம் I ,II, II (SLAS

இலங்கை கணக்காளர் சேவை தரம் I,II,II (SLACS)

இலங்கை திட்டமிடல் சேவை தரம் I,II,III ( SLPS)

Tuesday, May 2, 2023

அதிபர் சேவையின் பிரச்சினைகளுக்கான தீர்வு



 அதிபர்கள் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு அவசர தீர்வுகளை சமர்ப்பிக்க ஐந்து உறுப்பினர்கள் உறுதிபூண்டுள்ளனர்

இலங்கை அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவும் குறைபாடுகள் மற்றும் சேவைப் பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து அவற்றுக்கான உடனடித் தீர்வுகளை தெரிவிப்பதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த குழுவொன்றை நியமித்துள்ளார். கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத்தில் ஐந்து நிபுணர்கள் அடங்கிய குழு ஏற்கனவே தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

அதிபர்களின் அனைத்து தொழிற்சங்கங்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெறப்பட்டு, மேலதிக விவரங்களைச் சமர்ப்பிக்க மே 9  வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 15 ஆம் தேதி முதல் சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கல்வித் துறையில் உள்ள வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து யோசனைகளைப் பெறவும், மாகாணங்கள், வலயங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பாடசாலைகளுக்குச் செல்லவும் எதிர்பார்க்கிறோம் என்று குழுத்தலைவர் தெரிவித்தார். அதிபர்களின் பணிகளின் தற்போதைய நிலையைப் பார்க்கவும். உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை கருத்தில் கொண்டு அதிபர்களின் சேவையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Reference Link.

Sunday, April 30, 2023

பரீட்சை நாட்கள் - மே மாதம்.

 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதம் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் தொடர்பாக பரீட்சை நாட்கள், பரீட்சையின் பெயர் மற்றும் பரீட்சை நடைபெறும் இடங்கள் என்பவற்றை உள்ளடக்கிய அட்டவணையினை பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜெ.எம்.சீ அமித் ஜயசுந்தர அவர்களினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் நாட்காட்டியினை கீழ் உள்ள link யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்

Exam days - Month of May 2023

Saturday, April 29, 2023

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி - 2023

 


அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டியினை கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான அறிவித்தல் மற்றும் நிபந்தனைகளை 2023.04.21 ம் திகதியிடப்பட்ட கல்வி அமைச்சின் சுற்றுநிருப இல. 19/2023 யினூடாக கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க அவர்களினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

அரச பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் அனைத்து பிரிவெனா மாணவர்கள் மற்றும் பிக்குமார்களும் சர்வதேச பாடசாலைகள் மற்றும்  இது போன்ற ஏனைய பாடசாலை மாணவர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியும்.

இந்த பாடசாலை சிறுவர் சித்திரப் போட்டி சம்பந்தமான சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்ப படிவத்தை கீழ் காணும் Link யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

School children Drawing Competition - 2023


உங்கள் EPF பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்

 ஊழியர் சேமலாப நிதியம் (EPF) பற்றி இன்று வரைக்கும் எம்மில் அதிகமானவர்களுக்கு போதிய தெளிவில்லாமல் இருக்கின்றது.  ஆகவே தான், இதன்மூலம் EPF பற்...